இராஜவல்லிபுரம்குளம் திருநெல்வேலி
பார்த்தவர்கள் - 631
நீர் நிலை பற்றி
தொடர்ச்சியாக உள்ள இராஜவல்லிபுரம், கல்குறிச்சி, குப்பக்குறிச்சி, பாலமடை குளங்கள் ஸ்ரீ வல்லப பாண்டியன் (கி.பி.830-862) காலத்தில் வெட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. குளத்திற்கு தெற்கே தாமிரபரணி நதியும் வடக்கே சிற்றாறு நதியும் செல்கின்றன. குளக்கரைகளில் அமைந்துள்ள சாஸ்தா கோவில்களில் ஆல், அத்தி, அரசு, வேம்பு போன்ற மரங்கள் சோலைகளாக காட்சி அளிக்கின்றன. இக்குளங்கள் பூ நாரை உட்பட அதிக எண்ணிக்கையிலான பறவைகளுக்கு உணவளிக்கிறது. பண்டைய தமிழரின் நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டான குமிழித் தூம்பு இக்குளத்தில் உள்ளது.